Powered By Blogger

Sunday 6 March 2011

             பெண்ணின் பெருமை
பெண்ணால் பிறந்தேன்;பெண்ணாய் பிறந்தேன்;பெண்ணை பெற்றேன்;பெருமை படுகிறேன்
     உலக   மகளிர் அனைவருக்கும்                                                                                                       மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!!

Saturday 5 March 2011

மங்கையர் மலரில் நான் படித்து ரசித்த கவிதை ஒன்று
                  தேர்ச்சி
கணிதத்தோடு போராடுகையில் வருகிறது ஒரு குரல்
"ஒரு குடம் தண்ணி பிடிச்சு உள்ளே வையேன்"
அறிவியலோடு உரையாடுகையில்.......
"அடுப்படியில் கூட நிக்காம எப்படி நீ குப்பை கொட்ட போற?"
வரலாற்றைப் புரட்டும்போது புரட்டியெடுக்கிறது "மாதாந்திர வலி!"
இருப்பினும் ஒவ்வொரு வருடமும்,தலைப்பு செய்தியில் தவறாமல்" இந்த வருடமும் மாணவிகளின் தேர்ச்சி சதம் அதிகம்!"

Saturday 26 February 2011

இன்று என் தோழி ஒருவரின் மகனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றேன்.அறிவியல் வளர்ச்சியால் ஸ்டெம் செல் பயன்படுத்தி அவனுக்கு
அறுவைசிகிச்சை செய்திருந்தார்கள்.அறிவியல் முன்னேற்றத்தை  கண்டு வியந்தேன்.அறிவியல் வளர்ச்சியால் இறப்பு விகிதம் குறைந்து இருந்தாலும் நோய்கள் அதிகரித்து இருப்பது மனதுக்கு கவலை அளித்தது

Saturday 19 February 2011

என் நந்தவனம்  உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது